Friday, October 17, 2008

ORAM PO KOLIWOOD TRAIN VARUTHU

நேற்று நெய்வேலி...இன்று..இராமேஸ்வரம்
-----------------------------------------------
இன்று வரை தீராமல்..நாளைக்கும் எளிதில் தீர்வுக்காண்க்கூடியதாக
இல்லாத மின்சார பிரச்சினையத் தொட்டு...அதாங்க..
நம்ம கோலிவுட்டை சேர்ந்த கலை பிதாமகர்களெல்லாம் ..கர்னாடகத்துக்கு மின்சாரம் தரக்கூடாதுன்னு
கூட்டமா கோஷம் போட்டது உங்க ஞாபகத்துல இருக்கும்.

எப்பவுமே எங்க சினிமாகாரவுங்களுக்கு..எத செஞ்சாலும் ஒரு இதா செய்யணும் பாத்துக்கிடுங்க..
அதேன்..எதோ ரியாலிசமோ..தக்காளிரசமோனு..பெரியவங்க சொல்லுவாங்க பாருங்க..
அப்படி செய்யலன்னா தூக்கம் வராது அவங்களுக்கு..

மின்சார பிரச்சினையா..கர்னாடகாவுக்கு மின்சாரம் எங்க இருந்து போவுது..? அட..நம்ம நெய்வேலியிலருந்து..
அப்ப உடனே..புரொடக்ஷன் வண்டி...கேரவன்..ட்ராலி..கிரேன்..மொத்ததையும்..தூக்குங்கப்பா..
நூத்து கணக்குல் பஸ்ஸு..ஐந்து நட்சத்திர ஓட்டல்..சாப்பாடுன்னு...மொத்த கலை உலகமும்..ஊர்வலம்கட்டினாங்க
நெய்வேலிக்கு..

என் தேசத்தின்..நாளைய தலைமுறை பையனெல்லாம்..தங்கள்..கனவு நாயகர்களை கிட்டத்துல பாத்து..உவ்வேன்னு
குமட்டினதாகூட ஒரு தகவல்..எல்லாம் தீர்த்த மகிமைதான்..ரெண்டு மாநிலத்துக்கு இடைப்பட்ட பிரச்சினைக்கு 
இப்படி குரல் கொடுக்க..அன்னிக்கு..ஆண்ட..அருள்மிகு அம்மா..ஸூட்கேஸ்..ஸூட்கேசா அள்ளிவிட்டது..இந்த
உலகத்துக்கே வெளிச்சம்.

அந்த ப்ராஜெக்ட்டை முன்ன நின்னு..நடத்தினது யாரு.."நம்ம்ளோட பாசத்துக்குரிய பாரதிராஜாத்தேன்."
இப்ப முனன நின்னு நடத்தறதும்..அதே பாசந்தேன்....

சென்னைக்குள்ளாற இப்பல்லாம் எங்கிட்டு ஷூட்ட்ங்க் நடந்தாலும்..அங்க ஒரு நாளைய முதல் மந்திரி
நடிச்சிக்கிட்டிருப்பாங்கன்னா பாத்துக்கிடுங்க..

இப்ப ராமேஸ்வரத்துக்கு வருவோம்..அதெப்பிடிங்க..மாநிலத்தின் ஆளும் தலைமைக்கு...யாரையோ எதிர்க்க
தன் இருப்பை காட்டணும்னு..காட்டணும்னு நெனைக்கிறப்பல்லாம்..மட்டும்தான்..அல்லதுகாட்டணும்னு நெனைக்கிற உடனேதான்
எங்க கோலிவுட்டு காரவங்களுக்கு..டமில்..டமிலர்..இன்னும்..டம்ளர் மேல் எல்லாம்...இன உணர்வு பொங்கிவரும்..
இப்பவும் பொங்கிக்கிச்சு...

சரி...ரெண்டாயிரம் பேரு..ஒரு தனி ரயிலு..போகவர ஆயிரம் கிலோ மீட்டர் பயணம்..,தங்க..,குளிக்க,..அப்புறம்
அப்பிடி இப்பிடின்னு..என்ன தொகை வரும்னு..சும்மா கூட்டி கழிச்சி பாருங்க..இப்ப நம்ம பயக..ஈழம்..ஈழம்னு
கேக்குறாங்கால்ல..அந்த நிலப்பகுதியவே..இலங்கை அரசாங்கத்துக்கிட்ட இருந்து..வாங்கி குடுத்துடலாம்..
அம்புட்டு துட்டு ஆவும்...இது எதுக்கு..? போராட்டத்தை இங்கனையே எங்கியாச்சும் ஓரமா வச்சிட்டு போலாம்ல..


தமிழர்க்கு ஆதரவா..குரல் கொடுத்தா..அது அங்க போயி கேக்கணுமாம்..இலங்கைக்கே போயிட வேண்டியதுதான..
அது என்ன ராமேஸ்வரம்..

நான் சொல்ல வர்றது இதேன்...தமிழ்ல..நல்ல தமிழ் படமா எடுங்க..இலங்கை பிரச்சினைய மையமா வச்சி படம் எடுத்த
புகழேந்தின்னு..ஒரு டைரக்டக்கரு அத ரிலீஸ்..பண்ண முடியாம சென்சார் பிரச்சினை வந்தப்ப..கடற்கரையில திரையிடப்பட்ட
அந்த படத்தோட பிரத்தியேக காட்ச்சியை பார்த்துட்டு ஒன்னும் பண்ணமுடியாம நின்னவர்தான்..நம்ம இயக்குனர் இமயம்..
இப்படி காசு செலவு பண்ணித்தான்..போராடணும்னா...காந்தியோட போராட்டத்துக்கு..ஆயிரம் உலக் வங்கிகளால்கூட பணம்
பைனான்ஸ் பண்ணியிருக்க முடியாது...

இது உணர்வுள்ள போராட்டமா தோணல..பம்மாத்தாதேன் தோணுது..கடலலையைத் தாண்டி சத்தம் கேக்காதே...
நம்ம ஊர்ல கூட கடல் இருக்கு..இங்க இருந்து கத்தலாமே..இவ்ளோ செலவுக்கு இடையில...இந்த ரெண்டு நாள் கூத்தை
நேரடி ஒளிபரப்புன்னு ஒருதரம்..,ஒரு ஸ்பெஷல் நாளா பாத்து.ஒருதரம்..சிறப்பு நிகழ்சியா..போடறப்ப கோடி கோடியா கொட்டுமே...
கொட்டி அள்ளுங்க..அள்ளி..அள்ளி கொட்டுங்க..

அரசியல்வாதிங்க..மீடியால..ஆளுக்கொரு டிவி..நடத்தறதும்..
சினிமானடிகருங்க..பாலிடிக்ஸ்ல..கலக்கறதா நெனச்சி..ஆளுக்கொரு கட்சி நடத்தறதும்..
இங்க மாறாத வரைக்கும்...

எதுவும் மாறப்போவதில்லை.





No comments:

Post a Comment